Monday, July 16, 2012

ஆர்காஸத்தை தூண்டும் காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து.

 



தாம்பத்ய உறவு என்பது வெறும் பத்து நிமிடத்தில் முடிந்துவிடுவது அல்ல. அது உற்சாகமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைய கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்கள் உங்கள் துணையை உற்சாகப்படுத்தும். அது இறுகலான மனதைக்கூட இளகச்செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். உங்களின் தாம்பத்ய வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்தும் முன் விளையாட்டுக்கள் குறித்து அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

உற்சாகப்படுத்துங்கள்

வீட்டில் எந்த தொந்தரவும் இன்றி நீங்கள் இருவர் மட்டும் தனித்திருக்கும் நேரத்தில் வரவேற்பரையில் ஜாலியாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படும். உங்கள் படுக்கை அறையில் அலங்கரிக்கபட்ட படுக்கை இருந்தாலும் ஹாலில் சின்னதாய் இருக்கும் ஷோபாவில் நெருக்கமாய் அமர்ந்து கிளர்ச்சியூட்டும் வகையில் பேசலாம். ஒரே தட்டில் விருப்பமான உணவை போட்டு ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக்கொள்ளலாம். அப்புறம் பாருங்கள் இந்த அன்பான முன்விளையாட்டு படுக்கை அறையில் சூப்பராக எதிரொலிக்கும்.

சின்ன சின்ன விளையாட்டு

கோடையில் செக்ஸ் ஆர்வம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அதிகமான முன் விளையாட்டுக்களை உங்கள் துணை விரும்பவும் கூடும் எனவே சின்ன சின்ன விளையாட்டுக்களை விளையாடுங்கள். கண்களை கட்டிக்கொண்டு தொட்டு விளையாடலாம். உற்சாகம் தரும் பழங்களை கையில் வைத்து அதை தூக்கிப்போட்டு பிடித்து விளையாடுவது, ஊட்டிவிடுவது போன்ற உற்சாகமான விளையாட்டுக்கள் உங்கள் துணையை குஷிப்படுத்தும்.

குளுமையான பாத்டப்

கோடையில் செக்ஸ் உற்சாகமாக இருக்க குளுமையான பாத்டப் உபயோகப்படும். குளிர குளிர நீரை நிரப்பி அதில் இறங்கி உட்கார்ந்து கொண்டு இருவரும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருங்களேன். அந்த மாதிரியான மூட் இல்லாதவர்களையும் காதல் மூடுக்கு கொண்டுவரும். அப்புறம் உங்கள் துணை உங்களிடம் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து நீங்களே அசந்து போவீர்கள்.

நாவினால் வருடுங்கள்

பசு தனது கன்றுக்குட்டியை நாவினால் வருடி தனது அன்பை வெளிப்படுத்தும். அதேபோல் உங்கள் அன்பை வெளிப்படுத்த உங்கள் நாக்கை நீங்கள் உபயோகிக்கலாம். உங்கள் துணையின் உணர்ச்சியை தூண்டும் பகுதிகளில் உங்கள் நாக்கினால் வருடலாம். இது அதிக கிளர்ச்சியை ஏற்படுத்தும். காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து, உதடு என நாவினால் மென்மையாக வருடுங்கள். அப்புறம் அன்பு உங்களுக்கு இரண்டு மடங்காக திரும்ப வரும்.

கவிதை பேசும் கைகள்

உங்கள் காதல் எண்ணத்தை விரல்களால் உணர்த்துங்கள். உங்கள் விரல்களின் மூலம் உங்கள் துணையை மென்மையாக தொடுவதன் மூலம் உங்கள் துணையானவர் கிளர்ச்சியடையக்கூடும். இதுபோன்ற முன் விளையாட்டுக்கள் உங்கள் துணையை உற்சாகமூட்டுவதோடு செக்ஸ் வாழ்க்கையில் நீடித்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

Labels:

செக்ஸ் என்ற ‘போர்க் களத்தில்’ காயங்கள் சகஜம் தான்!

 

காதல் போர்களத்தில் வெற்றி தோல்வி என்பது கிடையாது. தம்பதியர் இருவருக்குமே மகிழ்ச்சிதான். விட்டுக்கொடுத்தலும், பெற்றுக்கொள்ளுதலும் இருக்கும் ( win win method ). கூடல் பொழுதில் காயங்கள் ஏற்படுவது சகஜம். சந்தோச வலிகளும், உடல்களின் மேல் நகங்களால் வரையப்பட்ட ஓவியங்களும் ஏற்படுவது இயல்புதான். இது தம்பதியரின் காதல் விளையாட்டுக்களை நினைவூட்டிக்கொண்டே இருப்பவை. காதல் போர்க்களத்தில் ஏற்படும் காயங்களைப் பற்றி விளக்குகின்றனர் நிபுணர்கள் நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

காதல் கடி

தாம்பத்ய உறவு என்பது அஹிம்சையான இம்சைதான். அதில் ஆங்காங்கே காயங்கள் அதிகம் ஏற்படும். கணவனோ, மனைவியோ மாறி மாறி கடித்து கூட வைத்துக்கொள்வார்கள். இதனால் உடலில் ரத்தம் கன்றிக்கூடப் போய்விடும். மறுநாள் காலையில் குளிக்கும்போதுதான் தெரியும் முதல்நாள் இரவில் நடந்த சம்பவங்கள். புண்கள் ஏற்பட்டு விட்டால் கூச்சப்படாமல் உடனே உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். ஆன்டிபயாடிக் மருந்துகளை போட்டு காயத்தை ஆற்றுங்கள். அப்பொழுதுதான் காதல் நினைவுகள் வலியின்றி இருக்கும்.

நகக்கீறல்கள்

தாம்பத்திய உறவின் போது காதல் மயக்கத்தில் இருவருக்குமே நகக்கீறல்கள் ஏற்படுவது வாடிக்கைதான். அந்த நேரத்தில் வலி எதுவும் தெரியாமல் இருந்தாலும் மறுநாள் காலையில் எரிச்சல் ஏற்படும். அந்த காயத்திற்கு பாடி லோசன்களை போடுங்கள். காயம்பட்ட இடத்தில் கற்றாழை ஜெல், தேன் தடவலாம் எரிச்சலோ, வலியோ இருக்காது.

தசை பிடிப்பு

செக்ஸ் என்பது ஒரு எக்சர்சைஸ் போலத்தான். சிலர் அதீத ஆர்வத்தில் துணையை இம்ப்ரஸ் செய்யவேண்டும் என்று ஏதேதோ விளையாட்டுக்களில் ஈடுபடுவார். இதனால் திடீரென்று தசைப்பிடிப்பு ஏற்பட்டு விடும். வலி உயிரே போவது போல இருக்கும். பதற்றப்படாமல் ரிலாக்ஸ் செய்யுங்கள். காதல் விளையாட்டுக்களுக்கு வலி படிப்படியாக குறையும். இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடுங்கள்.

புதுமணத் தம்பதியராக இருந்தால் ஒரு சிலருக்கு பிறப்புறுப்பில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடனே சிலர் பயந்து விடுவார்கள். பதற்றப்படாமல் புண்களை ஆற்றுவதற்கான வழியை காணவேண்டும். உடனே உறவில் ஈடுபடாமல் சிலநாட்கள் விடுமுறை கூட விடலாம் தப்பில்லை.

தாம்பத்ய உறவு என்பது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விசயம்தான் என்றாலும் சில காயங்கள் ஏற்படுவது சகஜம்தான். அவற்றை எளிதில் சரி செய்துவிடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Labels:

விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவில்லை..


 

விஜய்யை வைத்து கெள‌தம் இயக்கும் புதிய படம் யோஹன் அத்தியாயம் ஒன்று. இதில் விஜய் ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் பரவியது. பவன் கல்யாணுடன் ஸ்ருதி தெலுங்கில் நடித்த கப்பார்சிங் படம் வெற்றிகரமாக ஓடியது. எனவே ஸ்ருதியை கெள‌தம் யோஹன் படத்துக்கு தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து ஸ்ருதியிடம் கேட்டபோது மறுத்தார். யோஹன் படத்தில் விஜய்யுடன் நடிப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. அப்படத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை என்றார். தன் கைவசம் நிறைய படங்கள் இருப்பதாகவும் கூறினார்.

கெள‌தம்மேனனும் ஸ்ருதியை தேர்வு செய்ததாக வெளியான செய்திகள் வெறும் வதந்திதான் என்றார். யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிப்பதற்காக ஸ்ருதியிடம் பேசவில்லை. கதாநாயகி தேர்வை இன்னும் தொடங்கவில்லை. இங்கிலாந்தில் பெரும் பகுதி காட்சிகள் படமாக உள்ளது. ஹாலிவுட் நடிகர்களும் இதில் நடிக்க உள்ளனர் என்றார். 


Labels:

Sunday, July 15, 2012

ரசிகர் மன்றம் தொடங்கும் கதாநாயகி


 TamilBeat.Com - Hansika 039






   'ங்கேயும் காதல்' என்ற படத்தில் ஜெயம் ரவியின் நாயகியாக அறிமுகமாகிஅடுத்தப் படத்திலேயே விஜயுடன் வேலாயுதத்தில் ஜோடி போட்டவர் ஹன்சிகா மோத்வானி..இப்போது அவர் நடித்து வரும் படம் உதய நிதி ஸ்டாலின் ஜோடியாக ஒரு கல் ஒரு கண்ணாடி..அப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
              வந்த வேகத்தில் முன்னணி நாயகன் விஜய்க்கு ஜோடியானாலும் அம்மணி இதுவரை பெரிதாய் எதையும் சாதிக்கவில்லை..தன்னை முன்ன்ணி நாயகி என்று சொல்லிக் கொள்ள முடியவுமில்லை.சொல்லிக் கொள்கிறமாதிரி கையில் எதுவும் படங்கள் இல்லை..ஆனாலும் அவரை சந்தித்துப் பேச ரசிகர்கள் கும்பலாய் சென்று தங்களை உங்கள் ரசிகர்கள் என்றும் உங்களுக்கு விரைவில் ரசிகர் மன்றம் தொடங்கப் போவதாகவும் தெரிவித்தனர்.. ஆச்சயர்ப்பட்ட மோத்வானி கொஞ்சம் யோசித்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டார்..
  'ங்கேயும் காதல்' என்ற படத்தில் ஜெயம் ரவியின் நாயகியாக அறிமுகமாகிஅடுத்தப் படத்திலேயே விஜயுடன் வேலாயுதத்தில் ஜோடி போட்டவர் ஹன்சிகா மோத்வானி..இப்போது அவர் நடித்து வரும் படம் உதய நிதி ஸ்டாலின் ஜோடியாக ஒரு கல் ஒரு கண்ணாடி..அப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
              வந்த வேகத்தில் முன்னணி நாயகன் விஜய்க்கு ஜோடியானாலும் அம்மணி இதுவரை பெரிதாய் எதையும் சாதிக்கவில்லை..தன்னை முன்ன்ணி நாயகி என்று சொல்லிக் கொள்ள முடியவுமில்லை.சொல்லிக் கொள்கிறமாதிரி கையில் எதுவும் படங்கள் இல்லை..ஆனாலும் அவரை சந்தித்துப் பேச ரசிகர்கள் கும்பலாய் சென்று தங்களை உங்கள் ரசிகர்கள் என்றும் உங்களுக்கு விரைவில் ரசிகர் மன்றம் தொடங்கப் போவதாகவும் தெரிவித்தனர்.. ஆச்சயர்ப்பட்ட மோத்வானி கொஞ்சம் யோசித்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டார்..
            ரசிகர் மன்றம் ஆரம்பித்தால் தமிழில் நாயகியாக ஒரு பத்து வருடங்கள் தாக்குப் பிடித்து விடலாம் என்ற நப்பாசையில் தன் நெருங்கிய நண்பர்களிடம் கருத்துக் கேட்டு வருகிறார் மோத்வானி..
            ஆமா இவங்க பெரிய குஷ்பூ,ரசிகர் மன்றம் இவங்களுக்கு வைக்கப் போறாங்க..நாலு பேரை கரெக்ட பண்ணினமா நாலு படம் நடிச்சமா நாலு காசைப் பாத்தமான்னு இல்லாம எதுக்கு இந்த தேவையில்லாத ஆசைன்னு கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சு அடி படுகிறது..
          ' சாலா கபே' என்ற படத்தை இப்போது இயக்கி வருகிறார் சுந்தர் சி..இப்படத்தை முடித்த கையோடு விஷாலை நாயகனாக்கி முழு நீள நகைச்சுவை படமொன்றை இயக்க இருக்கிறார்..இதில் விஷால் மூன்று வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.அதில் ஒரு வேடம்..நகைச்சுவை வேடம்..
          தெலுங்குப் பட உலகம் இவ்வளவு வேகமாக தன் வீட்டுக் கதவைத் தட்டும் என எதிர்பார்க்கவில்லை அமலா பால்..ஏகப்பட்ட கதைகளை கேட்டு வைத்திருக்கிறார்.தெலுங்கில் முன்ன்ணியாக இருக்கும் அனுஷ்காவை வீழ்த்தி ஆந்திராவில் ஆட்டம் போடலாம் என மனக் கணக்கு போட்டபடி இருக்கிறார்..அதற்காகவே இப்போது ஒரு வாத்தியாரை நியமித்து அதி வேகமாய் தெலுங்கு கற்று வருகிறார்..தெலுங்கிலும் ஒரு சுற்று வரலாம் என எதிர்பார்க்கலாம்..அதற்கான அத்தனை தகுதிகளும் அமலா பாலிடம் இருக்கிறதே..
         கமலஹாசன் நடித்து வரும் 'விஸ்வரூபம்' படத்தில் "கதக்" நடனம் முக்கிய அங்கமாக இருப்பதால் கமல் அந்த நடனத்தை கற்றுக் கொண்ட பிறகே அந்தக் காட்சியில் நடித்திருக்கிறார்.அவர் பரத நாட்டியம் முறைப்படி கற்றவர் என்பது குறிப்பிடப் பட்டது..
         "யிரம் முத்தங்களுடன் தேன்மொழி'' என்ற படத்தில் நாயகனும் நாயகியும் உதட்டோடு உதடாக முத்தங்களை பரிமாறிக் கொள்ளும் காட்சி ஒன்று இடம் பெறுகிறது..அக்காட்சி இளசுகளிடையே பெறும் வரவேற்பை பெறும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்..
         நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1964 ம் ஆண்டு நடித்து திரைக்கு வந்து பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த படம் 'கர்ணன்'..இந்தப் படம் நவீன தொழில் நுட்பத்தால் மெறுகேற்றப்பட்டு பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகிறது..மீண்டும் 100 நாட்கள் ஓடினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை..ஏனென்றால் கர்ணனாக நடித்த சிவாஜியின் நடிப்பு அப்படி..
----------------------------------             ரசிகர் மன்றம் ஆரம்பித்தால் தமிழில் நாயகியாக ஒரு பத்து வருடங்கள் தாக்குப் பிடித்து விடலாம் என்ற நப்பாசையில் தன் நெருங்கிய நண்பர்களிடம் கருத்துக் கேட்டு வருகிறார் மோத்வானி..
            ஆமா இவங்க பெரிய குஷ்பூ,ரசிகர் மன்றம் இவங்களுக்கு வைக்கப் போறாங்க..நாலு பேரை கரெக்ட பண்ணினமா நாலு படம் நடிச்சமா நாலு காசைப் பாத்தமான்னு இல்லாம எதுக்கு இந்த தேவையில்லாத ஆசைன்னு கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சு அடி படுகிறது..
         



 ' சாலா கபே' என்ற படத்தை இப்போது இயக்கி வருகிறார் சுந்தர் சி..இப்படத்தை முடித்த கையோடு விஷாலை நாயகனாக்கி முழு நீள நகைச்சுவை படமொன்றை இயக்க இருக்கிறார்..இதில் விஷால் மூன்று வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.அதில் ஒரு வேடம்..நகைச்சுவை வேடம்..
          தெலுங்குப் பட உலகம் இவ்வளவு வேகமாக தன் வீட்டுக் கதவைத் தட்டும் என எதிர்பார்க்கவில்லை அமலா பால்..ஏகப்பட்ட கதைகளை கேட்டு வைத்திருக்கிறார்.தெலுங்கில் முன்ன்ணியாக இருக்கும் அனுஷ்காவை வீழ்த்தி ஆந்திராவில் ஆட்டம் போடலாம் என மனக் கணக்கு போட்டபடி இருக்கிறார்..அதற்காகவே இப்போது ஒரு வாத்தியாரை நியமித்து அதி வேகமாய் தெலுங்கு கற்று வருகிறார்..தெலுங்கிலும் ஒரு சுற்று வரலாம் என எதிர்பார்க்கலாம்..அதற்கான அத்தனை தகுதிகளும் அமலா பாலிடம் இருக்கிறதே..
         கமலஹாசன் நடித்து வரும் 'விஸ்வரூபம்' படத்தில் "கதக்" நடனம் முக்கிய அங்கமாக இருப்பதால் கமல் அந்த நடனத்தை கற்றுக் கொண்ட பிறகே அந்தக் காட்சியில் நடித்திருக்கிறார்.அவர் பரத நாட்டியம் முறைப்படி கற்றவர் என்பது குறிப்பிடப் பட்டது..
         "யிரம் முத்தங்களுடன் தேன்மொழி'' என்ற படத்தில் நாயகனும் நாயகியும் உதட்டோடு உதடாக முத்தங்களை பரிமாறிக் கொள்ளும் காட்சி ஒன்று இடம் பெறுகிறது..அக்காட்சி இளசுகளிடையே பெறும் வரவேற்பை பெறும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்..
         நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1964 ம் ஆண்டு நடித்து திரைக்கு வந்து பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த படம் 'கர்ணன்'..இந்தப் படம் நவீன தொழில் நுட்பத்தால் மெறுகேற்றப்பட்டு பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகிறது..மீண்டும் 100 நாட்கள் ஓடினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை..ஏனென்றால் கர்ணனாக நடித்த சிவாஜியின் நடிப்பு அப்படி..
----------------------------------


  

 


 உண்மையில் தமிழ் பட நாயகர்களுடன் இணைந்து ஆடி வெற்றி கொள்ள முடியாது. என்னுடன் இணைந்து நடித்த நாயகர்கள் அத்தனை பேரும் பயங்கரமான நடனகலைஞர்கள் எனக் கூறியுள்ளார் நடிகை ஹன்ஷிகா

இளையதளபதி விஜய், தனுஷ், ஜெயம் ரவி ஆகியோருடன் இணைந்து ஆடுவது எனக்கு பெரிய சவாலாக இருந்துள்ளது. வேகமாகவும், நாயகிகளுக்கு ஏற்றவாரும் ஆடுவார்கள்.

ஆனால் தமிழ்பட நாயகிகளுடன் போட்டிப்போட்டு ஆட நான் எப்பவும் தயாராக உள்ளேன். நாயகர்களுடன் என்னால் போட்டி போட்டு ஆட முடியாது என்று ஹன்ஷிகா மோத்வானி 











Labels:

Monday, June 25, 2012

சகுனிக்கு ஷாக் கொடுத்த சம்பளம்!





 இன்று உலகம் முழுவதும் வெளியாகும் சகுனி படத்தை கடந்த மே மாதமே கோடை வெளீயிடாக ரிலீஸ் செய்யவே முதலில் திட்டமிட்டார்கள்.
ஆனால் அதற்கு சாத்தியமில்லாமல் செய்து விட்டார்களாம். முதலில் அதில் வில்லனாக நடித்தார் சலீம்கௌஸ். சகுனி படப்பிடிப்பு முடிந்த்து மொத்தப்படத்தையும் முடித்துப் பார்த்தபோது சலீம் நடிப்பில் அப்பயொன்றும் சத்து இல்லை என்று சொல்லி, அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு அவர் நடித்த  பொலிட்டிகல் புரோக்கர் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜை நடிக்க வைத்திருக்கிறார்கள்!
தெலுங்கில் கார்த்திக்கு நல்ல மார்க்கெட் என்பதால், பிரகாஷூம் மறுபேச்சு பேசாமல் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்திருகிறார். ஏற்கனவே கார்த்தியின் பட நிறுவனமான க்ரீன் ஸ்டூடியோவுக்கு பிரகாஷ்ராஜ் பணம் தர வேண்டியிருந்ததால் அட்வான்ஸ் கூட வாங்காமல் நடித்து முடித்திருக்கிறார். பிறகு டப்பிங் பேச அழைத்தபோது பிரகாஷ்ராஜுக்கு ஒரு நாளைகு இரண்டு லட்சம் சம்பளம் வீதம் 20 நாட்களுக்கு 40 லட்சம் என்று ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருகிறார்கள்.

ஆனால் தற்போது பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டெட் வில்லன் ஆகியிருக்கும் பிரகாஷ்ராஜ், ரவுடி ரத்தோர் படத்துக்கு 2 கோடி சம்பளம் வாங்கியிருகிறார். தமிழுக்கு 1 கோடிக்கு குறைந்து நடிக்கமுடியாது என்று சொன்னவர் க்ரீன் ஸ்டூடியோ 70 லட்சம் செட்டில் செய்த பிறகே டப்பிங் பேசிக்கொடுத்தாராம்! நேற்று பொறந்த ஹீரோ எல்லாம் ஐந்துகோடி பத்து கோடி என்று சம்பளம் வாங்கும்போது பெரிய ரசிகப்பட்டாளத்தைக் வைத்திருக்கும் நான்  ஒரு படத்துக்கு ஒரு கோடி கேட்கக் கூடாதா என்று அதிரடியாகக் கேட்டாராம் பிரகாஷ்ராஜ்!
சகுனியில் இன்று எக்ஸ்போஸ் ஆக இருக்கும் இன்னொரு உள்குத்து அனுஷ்கா!  தற்போது கார்த்தியுடன் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் ஹீரோயினாக நடித்துவரும் அனுஷ்காவின் காலை கைப் பிடித்து, சகுனியில் ஐந்து காட்சிகளில் வந்துபோகும் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துவிட்டார்கள். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸாக இருக்கட்டும் என்று இதை மீடியா மோப்பம் பிடிக்காமல் பார்த்துக் கொண்டிருகிறார்கள்!

Labels:

சகுனி - சினிமா விமர்சனம்

Saguni Film Review Saguni Film Review

 நடிப்பு: கார்த்தி, சந்தானம், ப்ரணிதா, பிரகாஷ் ராஜ், ராதிகா, கிரண், கோட்டா சீனிவாசராவ், மனோபாலா, நாசர்
இசை: ஜீவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: பிஜி முத்தையா
பிஆர்ஓ: ஜான்சன்
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்
இயக்கம்: சங்கர் தயாள்
அரசியலை மையமாக வைத்து சடையர் வந்து நாட்களாகிவிட்டன. அப்படியே வந்தாலும் அவற்றில் பிரச்சார நெடி இருக்கும். ஆனால் கார்த்தி நடிப்பில் வந்துள்ள சகுனி, அந்தக் குறையைத் தீர்த்துவைத்துள்ளது. அரசியலை விமர்சித்த மாதிரியும் ஆயிற்று... பொழுதுபோக்குக்கு பொழுதுபோக்குமாயிற்று!
கதை ரொம்ப சிம்பிள். லாஜிக் கூட ஒப்புக் கொள்ளக்கூடியதுதான்... நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி இருந்தாலும், இப்படியெல்லாம் நடந்தாகூட நல்லாதான் இருக்கும் என்றே தோன்றுகிறது.
காரைக்குடியில் உள்ள கார்த்தியின் ஒரே சொத்து, ஒரு பூர்வீக வீடு. அதையும் ரயில்வே திட்டத்துக்காக இடிக்கப் பார்க்கிறது அரசு. இந்த வீட்டை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை வரும் கார்த்தி, அமைச்சரிடம் மனு கொடுக்க, அது வழக்கம்போல 'போக வேண்டிய' இடத்துக்குப் போகிறது!
முதலமைச்சரிடம் போனால் நியாயம் கிடைக்கும் என்று போகிறார்... அங்கே உருவாகிறது பகை.
தன் வீட்டை மீட்க வேண்டுமானால் முதலில் முதல்வரை வீழ்த்த வேண்டும்... அதற்கான அரசியல் ஆட்டத்தை சகுனியின் சாமர்த்தியத்தோடும், கண்ணனின் மனிதாபிமானத்தோடும் ஆடுகிறார் கார்த்தி. ஆட்டத்தில் அபாரமாய் வெல்லும் அவர் கடைசியில் அரசியல்வாதியாகிறாரா? என்பது கிளைமாக்ஸ்.
விடலைத்தனமான லுக், தெனாவட்டான பேச்சு, எதிலும் விளையாட்டுத்தனம் என்றே இதுவரை கார்த்தியின் கேரக்டர்கள் அமைந்திருந்தன. முதல்முறையாக இதில் பக்குவமான, புத்திசாலித்தனமான ஆட்டம். அதை அவர் ஆடும் விதம் ரசிக்க வைக்கிறது.
குறிப்பாக இட்லிக்கார ரமணி ஆச்சியை மேயராக்குவதும், பீடி சாமியாரை நெல்லி சாமியாராக மாற்றும் விதமும், வீரத்தமிழன் முன்னேற்றக் கழக தலைவரை முதல்வராக்கத் தரும் ஐடியாக்களும் சுவாரஸ்யமானவை.
முகத்திலும்கூட ஒரு மெச்சூரிட்டி வந்திருக்கிறது கார்த்திக்கு. அவர் போடும் அரசியல் மாஸ்டர் பிளான்களை நம்ப வைப்பது அந்த மெச்சூரிட்டிதான்!
முதல் பாதியில் சந்தானத்தைப் பயன்படுத்திக் கொண்ட விதம், பின்பாதியில் அவருக்கான காட்சிகளை குறைத்து கார்த்தியை முன்னிலைப்படுத்தியிருப்பதும் இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. நடனம், சண்டை என கிடைத்த வாய்ப்பிலெல்லாம் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார் கார்த்தி!
சந்தானமும் கார்த்தியும் ரஜினி கமலாக அறிமுகமாகிறார்கள். சந்தானத்திடம், தான் சென்னைக்கு வந்த கதையை கார்த்தி சொல்லும் விதம் வித்தியாசம்.. நச்சென்று பதிகிறது.
என்ன... கதாநாயகியான ப்ரணிதாவின் பாத்திரம்தான் சுத்தமாகப் பதியவில்லை. உடன் படம் பார்த்த நண்பரின் கமெண்ட்தான் இதற்கு பொருத்தம்: "ஹீரோயின் அழகா இருக்காங்களா இல்லையான்னு கவனிக்கிறதுக்குள்ள அவங்க ரோல் முடிஞ்சு போச்சேண்ணே!"
பீடி சாமியாராக வரும் நாசரைப் பார்க்கும்போதே, சிரிப்பு எட்டிப் பார்க்கிறது. ஆன்மீகத்தை மார்க்கெடிங் செய்து அவர் சேர்த்த ரூ 1000 கோடியை தேர்தலில் இறைக்க வைத்து ஆட்சியைப் பிடிப்பது அட போட வைக்கிறது!
மோசமான முதல்வராக பிரகாஷ்ராஜ். நிஜ அரசியல் தலைவர்களின் தகிடு தத்தங்களை பிரகாஷ்ராஜ் மூலம் புட்டுப் புட்டு வைக்கிறார்கள். பாலம் கட்டுவதன் பின்னணி, பதவியை பங்கிடும் விதம் என எதிலும் குடும்பத்துக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு எனும் அந்தத் தலைவர் யாரை நினைவுபடுத்த என்பது தெரியாமல் இல்லை!
கோட்டா சீனிவாசராவ் வழக்கம்போல அருமை.
இட்லிக்கார ஆச்சி ராதிகா, மேயராக பதவி ஏற்க ஒவ்வொரு படிக்கட்டில் கால் வைக்கும்போதும், அவரது கடந்த காலம் நினைவில் வந்துபோவது சூப்பர். எல்லா அரசியல் தலைவரும் பதவி ஏற்கும்போதும், மோசமான உத்தரவுகளில் கையெழுத்திடும்போதும் இப்படி ப்ளாஷ்பேக் கொஞ்சம் எட்டிப்பார்த்தால், அவர்களின் மனசாட்சி சாகாமலாவது இருக்கும்!
ரசிக்கும்படி காட்சிகள் நிறைய இருந்தாலும், அவற்றை ஒரேயடியாகத் திணித்துவிட்டதுபோன்ற உணர்வு. நீளம் வேறு அதிகம். கொஞ்சம் கத்திரி போட்டு ஷார்ப்பாக்கி இருக்கலாம்.
கிரண் இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகும்போதே, அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்துவிடுகிறது.
ஜிவி பிரகாஷ் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம். மனசெல்லாம் பாடலை படமாக்கியிருக்கும் விதம் ஜிலீர்... பிஜி முத்தையாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
முதல் படத்தையே வித்தியாசமாகத் தரவேண்டும் என்ற முனைப்பில், அரசியல் என்ற ஒரு பெரிய கேன்வாஸுக்குள் விளையாடியிருக்கிறார் இயக்குநர் சங்கர் தயாள். சின்னச்சின்ன சறுக்கல்கள் இருந்தாலும், வெற்றி இலக்கைத் தொட்டுவிட்டார்!

Labels:

Thursday, June 21, 2012

ஒருகல் ஒரு கண்ணாடி – திரை விமர்சனம்


நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
எழுத்து – இயக்கம்: ராஜேஷ் எம்
தயாரிப்பு – ரெட் ஜெயன்ட்
உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம்.
அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை. ஆனால் ஒரு இடத்தில் கூட, அடுத்த சீன் என்ன என்று ‘பாஸ்ட் பார்வர்டு’ கேட்காத அளவுக்கு, ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்!
இரண்டரை மணி நேரம் எப்படிப் போனதென்றே தெரியாத வேகமும் சுவாரஸ்யமும் கொண்ட திரைக்கதையும், கலகலப்பான வசனங்களும்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு.
குறிப்பாக சந்தானம். மனிதர் திரையில் அசத்தலாக அறிமுகமாகும்போது ஆரம்பிக்கும் சிரிப்பலை, கடைசி வரை நிற்காமல் தொடர்கிறது. அவரைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு டஜன் படங்களுக்குத் தாங்கும் இந்த ஓகே ஓகே.
ஹீரோ என்ற வகையில், இன்றைய அலட்டல் பார்ட்டிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் 200 மடங்கு பெட்டர்!
மிக சாதாரணமாக அறிமுகமாகி, காமெடியனால் வாறப்படும் அளவுக்கு இயல்பான நாயகனாக உதயநிதி மனதைக் கவர்கிறார். முதல் படத்துக்கே உரிய சின்னச் சின்ன தயக்கங்கள் அவரிடம் இருந்தாலும், அதுவே அவரை எதார்த்த நாயகனாகக் காட்ட உதவுகிறது. தனக்கு அந்நியமான நடனத்தைக் கூட முடிந்தவரை கெடுக்காமல் ஆடியிருக்கிறார். ஹன்ஸிகாவுடனான காதல் காட்சிகளிலும் இயல்பான நெருக்கத்தைக் காட்டி, தன்னை ஒரு வெற்றிகரமான தமிழ் நாயகனாக பதிவு செய்திருக்கிறார் உதயநிதி. வெல்கம்!
முந்தைய மூன்று படங்களை விட, இதில் ஹன்ஸிகா எவ்வளவோ பரவாயில்லை. பெரிதாக நடிக்கத் தேவையில்லாத பாத்திரம் என்றாலும், தன் தோற்றம் மற்றும் உடல்மொழியால் மனதைக் கவர்கிறார். இந்த ஆண்டு டாப் இடத்தைப் பிடிக்க இந்தப் படம் ஹன்ஸிகாவுக்கு உதவும்.
உதயநிதியின் அம்மாவாக வரும் சரண்யா கலக்கியிருக்கிறார். வழக்கமாக கண்ணீர் சிந்தும் அவர், இந்த பார்வையாளர்கள் கண்ணில் நீர்வரும் அளவு கலகலக்க வைக்கிறார். நல்ல மாறுதல். அவர் கணவராக வரும் அழகம் பெருமாளும் ஓகே.
ஷாயாஜி ஷிண்டேவை காமெடி போலீசாக்கிவிட்டார்கள்.
ராஜேஷ் படத்துக்கே உரிய கவுரவ நடிகர்களாக ஆர்யா, சினேகா மற்றும் ஆன்ட்ரியா. மூவரின் வருகையுமே படத்தை இன்னும் கலகலப்பாக்குகிறது.
குறையென்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. இதுபோன்ற படங்களில் குறைதேடிக் கொண்டிருந்தால், படத்தை ரசிக்க முடியாது.
ஹாரிஸ் ஜெயராஜ் இந்த முறையும் தனது முந்தைய மெட்டுகளை உல்டா பண்ணியிருக்கிறார். ஆனாலும் கேட்கும்படி உள்ளன பாடல்கள். குறிப்பாக அழகே அழகே, வேணாம் மச்சான்…
பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் படத்துக்கு தேவையான அளவு கச்சிதமாக உள்ளன.
வித்தியாசம், பரீட்சார்த்தம் என்ற பெயரில் எங்கும் முகம் சுளிக்காமல், சுவாரஸ்யம் குறையாமல் பார்க்கும்படியாக ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.
ஒருமுறை என்ன… ஒன்ஸ்மோர் பார்க்கலாம்!

Labels: