Monday, June 25, 2012

சகுனிக்கு ஷாக் கொடுத்த சம்பளம்!





 இன்று உலகம் முழுவதும் வெளியாகும் சகுனி படத்தை கடந்த மே மாதமே கோடை வெளீயிடாக ரிலீஸ் செய்யவே முதலில் திட்டமிட்டார்கள்.
ஆனால் அதற்கு சாத்தியமில்லாமல் செய்து விட்டார்களாம். முதலில் அதில் வில்லனாக நடித்தார் சலீம்கௌஸ். சகுனி படப்பிடிப்பு முடிந்த்து மொத்தப்படத்தையும் முடித்துப் பார்த்தபோது சலீம் நடிப்பில் அப்பயொன்றும் சத்து இல்லை என்று சொல்லி, அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு அவர் நடித்த  பொலிட்டிகல் புரோக்கர் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜை நடிக்க வைத்திருக்கிறார்கள்!
தெலுங்கில் கார்த்திக்கு நல்ல மார்க்கெட் என்பதால், பிரகாஷூம் மறுபேச்சு பேசாமல் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்திருகிறார். ஏற்கனவே கார்த்தியின் பட நிறுவனமான க்ரீன் ஸ்டூடியோவுக்கு பிரகாஷ்ராஜ் பணம் தர வேண்டியிருந்ததால் அட்வான்ஸ் கூட வாங்காமல் நடித்து முடித்திருக்கிறார். பிறகு டப்பிங் பேச அழைத்தபோது பிரகாஷ்ராஜுக்கு ஒரு நாளைகு இரண்டு லட்சம் சம்பளம் வீதம் 20 நாட்களுக்கு 40 லட்சம் என்று ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருகிறார்கள்.

ஆனால் தற்போது பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டெட் வில்லன் ஆகியிருக்கும் பிரகாஷ்ராஜ், ரவுடி ரத்தோர் படத்துக்கு 2 கோடி சம்பளம் வாங்கியிருகிறார். தமிழுக்கு 1 கோடிக்கு குறைந்து நடிக்கமுடியாது என்று சொன்னவர் க்ரீன் ஸ்டூடியோ 70 லட்சம் செட்டில் செய்த பிறகே டப்பிங் பேசிக்கொடுத்தாராம்! நேற்று பொறந்த ஹீரோ எல்லாம் ஐந்துகோடி பத்து கோடி என்று சம்பளம் வாங்கும்போது பெரிய ரசிகப்பட்டாளத்தைக் வைத்திருக்கும் நான்  ஒரு படத்துக்கு ஒரு கோடி கேட்கக் கூடாதா என்று அதிரடியாகக் கேட்டாராம் பிரகாஷ்ராஜ்!
சகுனியில் இன்று எக்ஸ்போஸ் ஆக இருக்கும் இன்னொரு உள்குத்து அனுஷ்கா!  தற்போது கார்த்தியுடன் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் ஹீரோயினாக நடித்துவரும் அனுஷ்காவின் காலை கைப் பிடித்து, சகுனியில் ஐந்து காட்சிகளில் வந்துபோகும் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துவிட்டார்கள். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸாக இருக்கட்டும் என்று இதை மீடியா மோப்பம் பிடிக்காமல் பார்த்துக் கொண்டிருகிறார்கள்!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home